×

மேற்கு வங்கத்தில் திடீரென 4,660 வாக்குச் சாவடிகளை அதிகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவு!!

டெல்லி: வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் 29ஆம் தேதி வாக்கு பதிவு முடிந்த பின்னர் 1,70,000 பேர் வாக்கு எண்ணிக்கை வரை தொடர்வார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடர்வார்கள், மறு உத்தரவு வரை இந்த படையினர் மேற்கு வங்கத்தில் தொடர்வார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வன்முறை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனிடையே மேற்கு வங்கத்தில் திடீரென 4,660 வாக்குச் சாவடிகளை அதிகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 321 வாக்குச்சாவடிகள் இடம் மற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் அறிவித்தபோது மேற்குவங்கத்தில் 80,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது கூடுதலாக 4,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இடங்களில் 4,660 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர 321 வாக்குச்சாவடிகளை இடம் மற்றம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 85,379 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Election Commission ,West Bengal ,Delhi ,Troops ,
× RELATED இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய்...