×

தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

கோவை, ஏப். 3: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

இதனை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொது மேர்பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா ஆய்வு செய்தார். அப்போது அவர் மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணி நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் தேர்தலின் போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து அலுவலர்களும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Coimbatore ,Tamil Nadu assembly ,Singanallur ,
× RELATED டோனில் இரும்பு பொருட்கள் திருட்டு: 3 வாலிபர்கள் கைது