×

டோனில் இரும்பு பொருட்கள் திருட்டு: 3 வாலிபர்கள் கைது

கோவை, ஏப். 3: குடோனில் இரும்பு பொருட்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவத்தூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (52). இவர் ராவத்தூரில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அதற்காக அருகிலேயே இரும்பு பொருட்கள் குடோன் வைத்துள்ளார். இதில் மோட்டார் உள்ளிட்ட இரும்பு பொருட்களை வைத்து உள்ளார். கடந்த 31ம் தேதி மகேஷ் மதியம் சாப்பிட சென்றார்.

அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது குடோனில் வைத்திருந்த மோட்டார் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் ஆட்டோவில் வந்து திருடி சென்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து மகேஷ் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இரும்பு பொருட்களை திருடி சென்றது குரும்பாளையத்தைச் சேர்ந்த சபரிஸ் (23), பூபதி (25) மற்றும் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராஜவேல் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

Tags : Coimbatore ,Mahesh ,Rawattur Thottam ,Singanallur, Coimbatore ,Rawattur ,
× RELATED தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி