×

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் உயர்வு

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையில் மக்கள் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்யவுள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.17,021, கோவைக்கு ரூ.16,496, மதுரைக்கு ரூ.13,147 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. வழக்கமாக சென்னை டூ தூத்துக்குடிக்கு ரூ.3,600 என கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.6,500 என கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக இன்று சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி வழித்தடத்தில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Good ,Easter ,Thoothukudi ,
× RELATED சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது...