கோவை: தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்து பேசிய சீமான்; ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம்; தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
நம்பிக்கையோடு இருங்கள் வெற்றிபெறுவோம் என்று விஜய் கூறுகிறார்; உங்களுக்கே நம்பிக்கை இல்லையே? வெற்றி நிச்சயம்’ என வசனம் பேசினால் மட்டும் போதுமா? உனக்கே நம்பிக்கை இல்ல என்று கூறினார்.
