×

உலக வங்கிக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விடுவேன்: சீமான் சின்சியர் பேட்டி

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசார கூட்டத்தில் ஈடுபட்டார். கோவை வேட்பாளர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். இதில் ஒரு மணி நேரம் படம் பார்த்து கதை சொல் என்ற வகையில் வீடியோவை ஓட விட்டு, தனது கனவுகள் என்ன என்பதை மேடையில் விளக்கினார். இதை பார்த்து பொதுமக்கள், போர் அடித்து போய் உட்கார்ந்திருந்த நிலையில், இரவு 10 மணி 5 நிமிடத்திற்கு தனது பேச்சை முடித்தார்.

பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசு வாங்கியிருக்கும் கடனை நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் எப்படி திருப்பி செலுத்துவீர்கள் என பத்திரிகையாளர் கேட்டதற்கு, ‘நான் கடனை திருப்பி செலுத்த மாட்டேன். மஞ்சள் நோட்டீஸ் அனுப்பி விடுவேன். யாருக்கு கடன் கொடுத்தீர்களோ யாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு கடன் கொடுத்தீர்களோ அவர்களிடமே போய் கேளுங்கள்’ என சீரியஸாக சீமான் பதிலளித்தார்.

Tags : World Bank ,Seeman ,Coimbatore ,Naam Tamilar Party ,Sulur, Coimbatore district ,Tiruppur ,
× RELATED மக்கள் மேலயும், உன் மேலயும்...