×

நாளை மறுநாள் நெல்லையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 2ஆம் கட்ட பரப்புரை திட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 3-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறார். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக திருநெல்வேலியில் பரப்புரையை தொடங்குகிறார்.

ஏப்.3ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடக்கும் தலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். ஏப்.4இல் நாகர்கோவில், சங்கரன்கோவில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். குமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவ்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார்.

ஏப்.5இல் விருதுநகர், மதுரை திருமங்கலம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். சாத்தூர், ராஜபாளையம் சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,K. ,Stalin ,Secular Progressive Alliance ,Tamil Nadu ,President ,MLA K. Stalin ,
× RELATED ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக...