லால்குடி, ஏப். 1: லால்குடி அருகே டூவீலரில் எடுத்து சென்ற ரூ.61,000 ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமுளூர் பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கணேசன் என்பதும், உரிய ஆவணம் இன்றி இவர் தனது டூவீலரில் ரூ.61,000 பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லால்குடி தொகுதி தேர்தல் நடத்தும் துணை அலுவலர் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனர்.
