×

இருதய பெருநாடி பாதிக்கப்பட்ட இளம் ஐடி ஊழியருக்கு சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமான அறுவை சிகிச்சை

 

சென்னை: சமீபத்தில் 39 வயதான ஒரு ஐடி ஊழியருக்கு சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்லும் இருதய பெருநாடியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு சென்னை பிரசாந்த் மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். அவருக்கு ‘டைப் ஏ அயோர்டிக் டிசெக்ஷன்’ எனப்படும் இருதய பெருநாடியில் மிகவும் அரிதான பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

அந்த நோயாளிக்கு இதற்கு முன் இருதயம் சார்ந்த எந்தவித பாதிப்பும் இல்லை. திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி மற்றும் மிக அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அந்த நெஞ்சுவலி, நெஞ்சில் இருந்து முதுகுக்கு பரவுவது போல இருந்ததால், இது சாதாரண மாரடைப்பு இல்லை என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். மேலும் பரிசோதித்ததில், அவரது இரண்டு கைகளிலும் ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் வெவ்வேறாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக செய்யப்பட்ட ‘எக்கோ’ பரிசோதனையில், ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய குழாயான இருதய பெருநாடி சேதம் அடைந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டது.

இந்த இருதய பெருநாடி சேதம் என்பது, வருடத்தில் பத்து லட்சம் பேரில் 3 முதல் 4 பேருக்கு மட்டுமே வரக்கூடிய மிக அரிதான நோயாகும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், ரத்தக்குழாய் வெடிப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல் உறுப்புகள் செயலிழப்பது போன்ற மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படும். இந்த நிலையில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இருதய மருத்துவக் குழுவினர், உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதில், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பகுதியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு செயற்கை ரத்தக் குழாயை பொருத்தி அவரது இயல்பான ரத்த ஓட்டத்தை சீராக்கினர்.

இந்த நோயாளிக்கு, ‘மாற்றியமைக்கப்பட்ட பெண்டால் செயல்முறை’ என்ற மிகச் சிறப்பான மற்றும் அதிக ஆபத்துள்ள இருதய பாதிப்பு காலங்களில் மட்டுமே செய்யப்படும் ஒரு பிரத்யேக சிகிச்சை செய்யப்பட்டது. இந்தப் பெரிய இருதய அறுவை சிகிச்சையில், சேதமடைந்த இருதய வால்வு, இருதய பெருநாடியின் அடிப்பகுதி மற்றும் மேல்நோக்கி செல்லும் பெருநாடி ஆகியவை ஒரு செயற்கை குழாயை கொண்டு மாற்றப்படுகின்றன. இதோடு, இருதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களும் மீண்டும் இணைக்கப்படும். இந்த சிகிச்சை முறையில், இருதய ரத்தக் குழாய்கள் சிறிய திசுக்களுடன் கவனமாக வெட்டி எடுக்கப்பட்டு, அந்த புதிய செயற்கை குழாயில் மிகவும் பாதுகாப்பான முறையில் இணைக்கப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கௌசிக் கண்ணன் கூறுகையில், “இந்த நோயின் தன்மையை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். ‘டைப் ஏ அயோர்டிக் டிசெக்ஷன்’ பாதிப்பில், சிகிச்சை தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோயாளிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையானது, மேம்பட்ட ரத்த ஓட்ட பராமரிப்பு முறைகள் மற்றும் மிகவும் துல்லியமான முறையில் இருதய பெருநாடியை மீண்டும் சீரமைக்கும் நுட்பங்களை உள்ளடக்கியதாகும். இருதய அறுவை சிகிச்சைகளிலேயே இது மிகவும் சவாலானது; இதற்கு சிறப்பான நிபுணத்துவமும், அதிநவீன மருத்துவ வசதியும் தேவை,” என்றார்.

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், “இத்தகைய இருதய பெருநாடி பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் ‘நேரம்’ மிகவும் முக்கியமானதாகும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்து அதிகரிக்கும். இப்படிப்பட்ட நிலையில், அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைந்து சிகிச்சை அளிக்க எங்கள் அவசர இருதய சிகிச்சை குழுவினர் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். தேவையான அறுவை சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை 24 மணி நேரமும் எங்கள் மருத்துவமனையில் தயார்நிலையில் இருப்பதால் இந்த அரிய மற்றும் அதிக ஆபத்துள்ள அறுவை சிகிச்சையைச் செய்து நோயாளியின் உயிரைக் காப்பி உள்ளோம்” என்றார்.

இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற கடுமையான இருதய பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் திடீரென ஏற்படும் கடுமையான நெஞ்சுவலிக்கு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியதன் அவசியத்தையும், உயிரைக் காப்பாற்றுவதில் பிரத்யேகமான இருதய சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் குறித்து: பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், தொழில்முறை நிபுணத்துவமும், பயிற்சியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு நவீன, உயர்தர உடல்நல சிகிச்சை சேவைகளை வழங்குகின்ற பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரபல மருத்துவமனையாகும்.

சென்னையில், வேளச்சேரி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இம்மாநகரில் சிறந்த சிகிச்சைக்கு சிறப்பாக அறியப்படும் மல்ட்டி – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகும். நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிலையமாக உருவாவதே இதன் தொலைநோக்கு திட்டமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. சிறந்த, தரமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை பெறுவது இம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இலக்காக இருக்கிறது. தரமான சிகிச்சை பராமரிப்பு, மரியாதை, உயர் செயல்திறன், சிகிச்சையின் பயனளிக்கும் தன்மை, பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவது ஆகிய மதிப்பீடுகளைச் சார்ந்தே பிரசாந்த் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்தவொரு நோய் பாதிப்பிற்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள், நோயறிதல்களுக்கும் மற்றும் அவைகளுக்குரிய சிகிச்சைகளுக்கும் பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு தொகுப்பு திட்டங்களையும் பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வருகிறது.

Tags : Chennai ,Chennai Prashant Hospital ,
× RELATED ஊத்துக்கோட்டை-சத்தியவேடு சாலையில்...