×

தனியார் ஊழியரிடம் ரூ.2.05 லட்சம் பறிமுதல்

குமாரபாளையம், மார்ச் 21: குமாரபாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி தனியார் நிறுவன ஊழியர் எடுத்துச் சென்ற ரூ.2.05 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கல்லங்காட்டு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.2.05 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் ஈரோடு தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் என்பதும், கடைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் செய்ததில் வசூலான தொகை என தெரிவித்தார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர். கைப்பற்றப்பட்ட பணம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Kumarapalayam ,Election Flying Squad ,
× RELATED ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு கோலம்