ராசிபுரம், மார்ச் 21: ராசிபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார விழிப்புணர்வு கோலம் பணியாளர்களை கொண்டு வரையப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ராசிபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு பிரசார வாசகங்களுடன் கூடிய வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ராசிபுரம் நகராட்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பார்த்துச் சென்றார்கள்.
