×

1 லட்சம் பிரசவத்தில் 140 பேர் இறப்பு.. தீர்வு தேடி தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேசம்.. திராவிட மாடலை பின்பற்றும் உ.பி. மாடல்!!

சென்னை : மகப்பேறின்போது ஏற்படும் மரணங்களை குறைக்க திராவிட மாடலை உத்தரப் பிரதேச மாடல் பின்பற்ற உள்ளது. பிரசவத்தின் போது அல்லது பிரசவம் முடிந்து 42 நாட்களுக்குள் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையை வைத்து மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து நாட்டிலேயே தமிழ்நாடு 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மகப்பேறு இறப்பு விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் 2021-2023 காலகட்டத்தில் மகப்பேறு மரண விகிதம் ஒரு லட்சம் மகப்பேறுக்கு 35 ஆக குறைந்துள்ளது. 2021 காலகட்டத்தில் இந்த இறப்பு விகிதம் 38 ஆக இருந்தது. இந்திய அளவில் மகப்பேறு மரணம் ஒரு லட்சத்திற்கு 88 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, பிரசவகாலம் வரை கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து கண்காணித்தல், குழந்தை பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், மலைக்கிராமங்களில் கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மகப்பேறு இறப்பு விகிதத்தை தமிழ்நாடு வெகுவாக குறைத்து நாட்டிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், மகப்பேறின்போது ஏற்படும் மரணங்களை குறைக்க திராவிட மாடலை உத்தரப் பிரதேச மாடல் பின்பற்ற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு லட்சம் பிறப்புக்கு உயிரிழப்புகள் 140ஆக உள்ளன. இதன் எதிரொலியாக மகப்பேறு மரணங்களை குறைக்க தமிழ்நாடு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உ.பி. அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டது. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளை உத்தரப்பிரதேச அதிகாரிகள் பார்வையிட்டனர். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவமனைகளை உ.பி. அதிகாரிகள் குழு பார்வையிட்டு, இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தது.

Tags : Uttar Pradesh ,Tamil Nadu ,Chennai ,
× RELATED விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான...