- பாஜக
- டி.டி.வி.தீனகரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- அமுகா
- பொதுச்செயலர்
- டிடீவி
- தின மலர்
- திமுகா
- ஆதிமுகா
சென்னை : குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.அதிமுகவை பொறுத்தவரை இன்னும் எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்கவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், கூட்டணிக்குள் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே பாஜக – பாமகவை தவிர கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பச்சமுத்துவின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் என பிற கட்சிகள் எல்லாம் இரட்டை இலையில் தான் நிற்க வேண்டும் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜகதான் தலைமை. வருகிற சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். டெல்லிக்கு வருமாறு எனக்கு 4 நாட்கள் முன்பு அழைப்பு வந்தது. பாஜகவின் டெல்லி தலைவர்களை நான் சந்திக்க செல்கிறேன்.தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாட்களில் சுமூகமாக எடுக்கப்படும்.”இவ்வாறு தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.ஜ. கூட்டணியில் மோதல் முற்றுகிறது.
