×

சுயவிருப்பத்தில் நாட்டை விட்டு வெளியேறும் சட்ட விரோத குடியேறிகளுக்கு 2600 டாலர்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா, சீனா, கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சுய விருப்பமாக அமெரிக்காவுக்கு செல்ல விரும்பினால் இலவச டிக்கெட் மற்றும் ஊக்க தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை விளம்பரப்படுத்தும் ஒரு சமூக ஊடகப் பதிவில், அத்துறை தாஜ்மகாலின் படங்களையும், கொலம்பியா மற்றும் சீனாவின் முக்கிய அடையாளச் சின்னங்களின் படங்களையும் பயன்படுத்தியுள்ளது.

ஒருவரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதற்கான செலவு தற்போது 18,245 அமெரிக்க டாலர்களாக (ரூ.16 லட்சத்து 89 ஆயிரத்து 926) உள்ளது. சொந்த விருப்பத்தில் நாடு திரும்புபவர்களுக்கு 2,600 அமெரிக்க டாலர்(ரூ.2லட்சத்து 40 ஆயிரம்) ஊக்க தொகை செலுத்துவதன் மூலம், இந்த திட்டத்தின் மூலமாக ஒருவர் தாமாக முன்வந்து வெளியேறுவதற்கான செலவு சுமார் 5,100 அமெரிக்க டாலராகக் குறைகிறது என்றும், இதன்மூலம் வரி செலுத்துவோருக்கு ஒரு நபருக்கு 13,000 அமெரிக்க டாலருக்கும் மேல் சேமிக்கப்படுகிறது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Tags : United States ,Washington ,India ,China ,Colombia ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்திடம் இழப்பீடு கோரியது ஈரான் அரசு!