தெஹ்ரான் : ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகளுக்கு தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம்சாட்டி, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இழப்பீடு கோரியது ஈரான் அரசு. ஈரானில் ஏற்பட்ட அனைத்துச் சேதங்களுக்கும் இழப்பீடு வழங்குவது ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுப்பு எனத் தெரிவித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது.
