டெல்லி: சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக நிதியை விடுவிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பணிகள் தொடங்கி இருந்தால் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும், முடிவுற்ற திட்ட பணிகளுக்கான நிதியை விடுவிக்க தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
