- எடப்பாடி பழனிசாமி
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்…
புதுடெல்லி: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்த புகாரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஏப்ரல் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறாக அளித்ததாக மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 23ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கை ஏப். 14ம் தேதி விரிவாக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர். தமிழ்நாட்டில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
