×

ஜெயங்கொண்டம் தொகுதியில் பொன்னாற்று பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணி

தா.பழூர், மார்ச் 16:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், நீர்வளத்துறை சார்பில், சோழன்மாதேவி பொன்னாறு 4-வது புதிய பிரதான வாய்க்காலை, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி மற்றும் சோழன்மாதேவி பொன்னாறு 4-வதுகிளை வாய்க்காலை, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் ஆகியவற்றை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் நாவலடியன், திமுக ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

Tags : Ponnaru ,Jayankondam ,Tha.Pazhur ,Ariyalur district ,Water Resources Department ,Cholanmadevi Ponnaru ,
× RELATED ஜெயங்கொண்டம், செந்துறையில் மக்கள் நீதிமன்றத்தில் 944 வழக்குகள் தீர்வு