×

ஊத்துக்கோட்டை ஓட்டல்களில் சிலிண்டரில் இருந்து விறகு அடுப்பு: தட்டுப்பாடு எதிரொலி

ஊத்துக்கோட்டை: ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக தமிழகத்தில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல் பரவியது. இதையடுத்து பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதுபோல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள மினி ஓட்டல்களில் அனைத்தும் கேஸ் சிலிண்டர் இல்லாததால் விறகு அடிப்பை பற்றவைத்து இட்லி மற்றும் வடை ஆகியவை தயார் செய்து வருகின்றனர். கேஸ் சிலிண்டர் இல்லாததால் ஒரு சில ஓட்டல்களை மூடிவிட்டனர்.

கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும் நம்பர் 7718012345 என்ற நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Tamil Nadu ,Iran ,Israel ,Chennai ,
× RELATED ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை...