×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் பாதுகாப்பு கேட்டு

அணைக்கட்டு, மார்ச் 14: அணைக்கட்டு அடுத்த தோரணங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் கணிதம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை அணைக்கட்டு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொண்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். பின்னர், அங்கிருந்து நேற்று அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஆம்பூர் அருகே மாதகடப்பா பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் கல்லூரி மாணவி வசிக்கும் தோரணங்குளம் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்ததும், அவரும் கல்லூரி மாணவியும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் சென்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் பெண் மேஜர் என்பதால் மாணவி விருப்பப்படி அவருடைய காதல் கணவர் கோகுலுடன் அனுப்பி வைத்தனர். பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தும் அவர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு வராத நிலையில் அந்தப் பெண் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : Anikuttu ,Thoranankulam ,Gudiyatham ,
× RELATED முதல்நிலை நூலகர், ஆய்வாளர்கள் மாவட்ட...