×

வேலூரில் டீ, காபி, பாதாம் பால் ரூ.4 உயர்வு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி

வேலூர், மார்ச் 13: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக வேலூரில் டீ, காபி, பாதாம் பாலுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிலவிரும் நிலையில், இந்தியா உட்பட பல நாடுகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைத்துள்ளனர். மேலும் ஒரு சில இடங்களில் உணவுகளின் விலையை சற்றே உயர்த்தி உள்ளனர். சில இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூரில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே டீ கடையில், ‘எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணத்தால், இன்று (நேற்று) முதல் டீ, காபி, பாதாம் பால் இவை அனைத்தும் ரூ.4 உயர்த்தப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர் விலை இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும்’ என அறிவிப்பு வைக்கப்பட்டது. இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட டீ கடைகளில் காஸ் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டன. அதேபோல், பெரும்பாலான உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு வகைகளின் விலையும், ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால், ஓட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,US ,Israel ,Iran ,India ,
× RELATED வேலூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு...