×

எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் பொய், அவரை மக்கள் நம்பத் தயாராக இல்லை – ஓ பன்னீர் செல்வம் பேச்சு

தென்காசி : தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தென்காசி, தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம், ” தாய் அன்போடு என்னை திமுகவில் இணைத்துக் கொண்டு முதல் பரப்புரையை எனக்கு கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். திராவிட கொள்கையை காக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

அனைத்து மக்களுக்கும் சமநீதியை பரவலாக்க முதல்வர் முயற்சித்து வருகிறார். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; கட்சியை அபகரித்து நாடகம் ஆடலாம். கத்தி கத்தி பேசினால் மக்கள் நம்பிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். ஊர்ந்துபோய் பதவியை பெற்று பதவி தந்தவருக்கே நன்றியாக இல்லை எடப்பாடி. தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே நபர் எடப்பாடி பழனிசாமிதான். தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட ஒரே நபர் எடப்பாடிதான்.

தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக கட்சித் தொண்டர்களுக்கு துரோகம் செய்த ஒரே நபர் எடப்பாடி. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வந்த பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சொல்வதெல்லாம் பொய், அவரை மக்கள் நம்பத் தயாராக இல்லை. நன்றி கெட்டவர் என்பதற்கான அடையாளம்தான் எடப்பாடி பழனிசாமி. நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நன்றி கெட்டவர் என்பதை மக்கள் தெரிந்துவைத்துள்ளார்கள்; ஆகவேதான், தோல்வியைத் தருகிறார்கள். அனைவருக்குமான இயக்கமாக இருந்த அதிமுகவை ஒரு சமூக கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.”இவ்வாறு ஹெரிவித்தார்.

Tags : Edappadi Palanisami ,TENKASI ,TAMIL NADU ,K. O ,Paneer Richam ,Stalin ,DIMUKA ,DISTRICT ,PANEER WEALTH ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில்...