×

தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் அட்டவணை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது..?

டெல்லி: தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் அட்டவணை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். 5 மாநிலத்திலும் தேர்தல் ஆணைய ஆலோசனை முடிந்துள்ளதால் தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக நாளை அசாம் செல்லும் பிரதமர் மோடி ரூ.47,800 கோடி திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார். பிரதமர் மோடியின் அசாம் பயனம் முடிந்தவுடன் 5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளது. மார்ச் 13, 14-ல் மோடி அசாம் செல்வதால் வரும் 15-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிட்டது போல் இந்த ஆண்டும் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Delhi ,Assam ,West Bengal ,Kerala ,Puducherry ,Chief Election Commissioner ,Gnaneshkumar ,
× RELATED மார்ச் 15ம் தேதிக்குள்...