- ஆப்கானியர்கள்
- இந்தியா
- ஐநா பாதுகாப்பு கவுன்சில்
- நியூயார்க்
- பாக்கிஸ்தான்
- ஆப்கானிஸ்தான்
- நிரந்தர பிரதிநிதி
- ஹரிஷ் பார்வத்தானி
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து பேசுகையில், ‘‘சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐநா பொதுச் செயலாளரின் அழைப்புக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது.
இவை சர்வதேச சட்டம், ஐநா சாசனம் மற்றும் அரசின் இறையாண்மைக் கொள்கையை அப்பட்டமாக மீறுகின்றன. ஒருபக்கம் சர்வதேச சட்டம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் உயர் கொள்கைகளை ஆதரிப்பது பாசாங்குத்தனம் காட்டுவது, அதே நேரத்தில் புனித ரமலான் மாதத்தில் இரக்கமின்றி விமானத் தாக்குதல்களை நடத்தி மார்ச் 6ம் தேதி நிலவரப்படி 185அப்பாவி மக்களை கொன்றது.
ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தகத்திற்கான பாதையை மறுப்பதன் மூலமும், அணுகலை இழிவாக மூடுவதன் மூலமும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தீவிரவாதத்தின் நடைமுறையானது கவலையளிக்கின்றது.இந்த செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். பிராந்தியத்திற்கான எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிபடுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
