×

மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர். இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ஆகாஷ் டெலிசன் தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பத்தினர், உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி சென்றனர். உறவினர்கள் 2ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags : TGB ,Manamadura ,CBCID ,Sivaganga ,DGB ,Jayakumar ,Sivaganga District ,Ayakarsami ,Adanur ,
× RELATED வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும்...