வாஷிங்டன்: நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது. மேலும் “சரணடைந்தப் பிறகு, ஈரானுக்கு ஒரு சிறந்த தலைவரை தேர்வு செய்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பணியாற்றுவோம்” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
