×

இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

சென்னை: ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக தீ விபத்து மற்றும் கட்டிடத்திற்கு சிறிய பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதை அடுத்து லெபனான் மீது இஸ்ரேல் 2-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் உள்பட 217 இந்தியர்கள் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய்க்கு வந்த 217 பேரும் போர் காரணமாக விமான நிலையத்திலேயே 3 நாட்களாக சிக்கித் தவித்தனர்.

இஸ்ரேல் – ஈரான் போருக்கு நடுவே மேற்கு ஆசிய நாடுகளுக்கு குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. குவைத்தில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Dubai ,Israel ,Iran war ,Chennai ,UNITED ,STATES ,IRAN ,West Asia ,US ,Riyadh, Saudi Arabia ,
× RELATED இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்