- நீதிபதி மீதான விசாரணைக் குழு
- யஷ்வந்த்
- மக்களவை
- சபாநாயகர்
- பேச்சாளர்
- தில்லி
- நீதிபதி
- யஷ்வந்த் வர்மா
- தில்லி உயர் நீதிமன்றம்
டெல்லி நீதிபதி யஷ்வந்த் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் மாற்றி அமைத்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி மக்களவை சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியதன் அடிப்படையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழுவை சபாநாயகர் ஓம்.பிர்லா மாற்றியமைத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் அவருக்கு பதிலாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரும் விசாரணை குழுவில் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
