×

தேசிய வட்டமேசை மாநாட்டில், இணைந்து பணியாற்ற தேர்தல் ஆணையமும் மாநில தேர்தல் ஆணையங்களும் முடிவு

 

டெல்லி: தேர்தல் ஆணையம் நடத்திய தேசிய வட்டமேசை மாநாட்டில், அரசியல் சாசன, தேசிய நலன்களை வலுப்படுத்தும் நோக்கில் இணைந்து பணியாற்ற தேர்தல் ஆணையமும் மாநில தேர்தல் ஆணையங்களும் முடிவு செய்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையாளர்களின் தேசிய வட்டமேசை மாநாட்டில் தேசிய மற்றும் அரசியலமைப்பு நலனை மேம்படுத்துவதற்காக இணைந்து செயல்பட இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் (SECs) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் மாநில தேர்தல் ஆணையாளர்களின் (SECs) தேசிய வட்டமேசை மாநாடு, நேற்று முன்தினம், 24 பிப்ரவரி 2026, செவ்வாய்க்கிழமை, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது.

* தலைமை தேர்தல் ஆணையர் திரு.ஞானேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர்சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் 30 மாநிலங்களின் மாநில தேர்தல் ஆணையங்கள் பங்கேற்றன.

* 27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த தேசிய வட்டமேசை மாநாட்டை மாநில தேர்தல் ஆணையாளர்கள் பெரிதும் பாராட்டினர். இதனை ஆண்டுதோறும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ECI மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் இணைந்து தீர்மானித்தன.

* தலைமை தேர்தல் ஆணையர் திரு.ஞானேஷ் குமார் அவர்களின் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் ஆணையாளர்களும் “தேசிய பிரகடனம் 2026” ஐ ஏற்கவும், தூய்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்றும், தேர்தல்களை வெளிப்படையாகவும், திறம்படவும் நடத்துவது ஜனநாயக நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் என்றும் உறுதிப்படுத்தின.

* தேசிய மற்றும் அரசியலமைப்பு நலன்களை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான சாத்தியமான கட்டமைப்புகளை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்தது. ECNET, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பு ஆகியவற்றை பகிர்வது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான செயல்முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்தது.

* பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பான சட்டங்களுடன் ஒருங்கிணைக்கவும், தேசிய மற்றும் அரசியலமைப்பு நலன்களை மேலும் மேம்படுத்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் இணைந்து செயல்படும் என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்திய தேர்தல் ஆணையம் தனது சர்வதேச நடவடிக்கைகளில் மாநில தேர்தல் ஆணையங்களையும் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டது.

* மாநாட்டின் போது மாநில தேர்தல் ஆணையங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் ஆணையாளர்கள் தலைமையிலான சட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் கூட்டு குழுவால் விரிவாக ஆய்வு செய்யப்படும்.

* தேசிய நலனுக்காக பொருத்தமான முடிவு எடுக்க அடுத்த மூன்று மாதங்களுக்குள் மாநிலம்/மத்திய பிரதேச வாரியான முன்னோக்கிய வழிமுறை ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

Tags : Election Commission ,State Election Commissions ,National Roundtable Conference ,Delhi ,Election Commission of India ,State Election Commissioners… ,
× RELATED 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...