×

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

 

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்பதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இங்கே இருந்து 20, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என்று நினைக்கிறேன். எல்லாரும் சிரிக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் அது நடக்கவும் போகிறது. ஊடக நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன்.

பின்னால் ஒருவர் ஆசிர்வாதம் வாங்கி விட்டார். அண்ணன் வி.பி.துரைசாமி. அமைச்சர்களாக வருவார்கள் என்று. இறைவன் நினைத்தால் நிச்சயமாக நடக்கும். தேசிய ஜனநாயக கட்சியின் அத்தனை உறுப்பினர்களும், அத்தனை கட்சியை சேர்ந்தவர்களும் ஒருமித்த கருத்தோடு அது, எது என்று இல்லாமல், நமக்குள் எந்தவித பாகுபாடும் இல்லாமல், அந்த கட்சி, இந்த கட்சி என்று சொல்லாமல், இன்றில் இருந்து அனைவரும் தேசிய ஜனநாய கூட்டணி என்ற உரத்த குரலில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுப்பட்டு பாட வேண்டும்.

ஓயாது உழைக்க வேண்டும். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வந்து கொண்டிருக்கிறார். எடப்பாடியிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்கள் வரவில்லை. இவர்கள் வரவில்லை என்று கட்டம் கட்டி பத்திரிகையில் செய்தி போட வேண்டாம். அந்த கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். எந்த கட்டம் கட்டினாலும் சரி. நாங்கள் இந்த ஆட்சியை கட்டம் கட்டுவதில் தான் இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Coalition government ,Tamil Nadu ,Nainar Nagendran ,Chennai ,BJP ,Amritsar ,
× RELATED எஸ்.ஐ.ஆருக்கு பின் வெளியான இறுதி...