×

மீண்டும் வேலையைக் காட்டிய தங்கம் விலை.. சவரன் ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440க்கு விற்பனை : நகை வாங்குவோர் மீண்டும் வேதனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கு விற்பனையாகிறது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்து வந்தது.

தொடர்ந்து புதன்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1 லட்சத்து 13,840க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000க்கு விற்பனையானது. அதே போல் நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290க்கும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ 2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து...