×

உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

 

வாஷிங்டன்: உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார். இந்தியா, சீனா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த கூடுதல் இறக்குமதி வரிசட்டவிரோதம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது இந்தியா, சீனா உள்பட உலக நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்போதுதான் 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி சிறப்பு அதிகாரம் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த கூடுதல் இறக்குமதி வரி யால் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கும் என கூறியிருந்தார். ஆனால் டிரம்ப் விதித்த கூடுதல் வரி சட்டவிரோதம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வில் 6க்கு 3 என்ற கணக்கில் நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினார்கள். நீதிபதிகள் சாமுவேல் அலிட்டோ, கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோர் இந்த உத்தரவில் உடன்படவில்லை. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான்ராபர்ட்ஸ் தனது உத்தரவில்,’ அமெரிக்க அரசியலமைப்பு மிகத் தெளிவாக வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. ஆனால் டிரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு அதிகாரத்தின் எந்தப் பகுதியையும் சட்டமியற்றுபவர்கள் நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது’ என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவு பாதிக்காத வகையில், அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டத்தின் கீழ், உலக நாடுகள் மீது புதிதாக 10% வரி விதித்து ட்ரம்ப் உத்தரவு. எனினும், இந்த வரிகள் 150 நாட்கள் மட்டுமே செல்லும். உத்தரவை நீட்டிக்க ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பால் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது.

Tags : President Trump ,US Supreme Court ,Washington ,Trump ,India ,China ,
× RELATED பாஜக ஆளும் மராட்டியத்தில் சட்டமன்ற...