- ராஜ்ய
- சபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- திருச்சி சிவா
- கானிமோசி சோமு
- என் ஆர் இலாங்கோ
- செல்வராஜ்
- ஜி. வாசன்
- தம்பிதுரை
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்.2ல் நிறைவடைகிறது.
இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்குவங்கம், சத்திஸ்கர், அசாம், பீகார், ஹரியானா என மொத்தம் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்.26 ல் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாள் எனவும், மார்ச் 6ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 9ம் தேதி கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 4 திமுகவிற்கும், 2 அதிமுக கூட்டணிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
