×

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போராட்டம்!!

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்பட 9 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். சபாநாயகரை நோக்கி பேப்பரை தூக்கி எறிந்த விவகாரத்தில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளார். காங். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்மொழிந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக வெங்கட்ராமன், ஹிபி எடின், அமரிந்தர் சிங், குர்ஜித் ஆஜிலா, கிரண் ரெட்டி, குரியாகோஸ், பிரசாந்த் படோல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை கண்டித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தியை பேச அனுமதி மறுத்துவிட்டு அடுத்தடுத்து உறுப்பினர்களை பேச அவைத் தலைவர் அழைத்ததால் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அச்சம் அடைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரைக் கூட நாடாளுமன்றத்தில் பேச விடுவது இல்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Tags : Lok Sabha ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Su. Venkatesan ,Manickam Thakur ,Budget Session ,
× RELATED உழைத்து மக்கள் ஈட்டும் பணத்தை மோடி...