×

நீட் முதுநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.ஐ. கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலம்

டெல்லி: நீட் முதுநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. 3-வது கட்ட கவுன்சிலிங்கில் முதுநிலை மருத்துவ படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பிரிவுக்கு மாறினர். என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டுக்கு மாறியதன் மூலம் நீட் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தியர் என்பதை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குடியுரிமை தகுதியை மாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. முதுநிலை நீட் ரேங்க் பட்டியலில் 1.50 லட்சம் பேருக்கு பின்னால் உள்ள 497 பேர் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவபடிப்பில் சேர்ந்து என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட முன்வந்துள்ளனர்.

உயர்ஜாதி ஏழை பிரிவில் வரும் இந்தியர்கள், என்.ஆர்.ஐ. என தகுதியை மாற்றாமல் இருந்திருந்தால் அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் வந்திருக்கும். நிர்வாக ஒதுக்கீட்டில் சென்றிருந்தால் பல கோடி கட்டணத்துக்கு பதில் குறைந்த கட்டணத்தில் மற்ற மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் யாரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்ல. மாறாக என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் வந்தவர்கள் எல்லாம் வெளிநாடு வாழ் இந்தியர்களாக உள்ள தங்கள் அத்தை, மாமா ஆதரவில் வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ஜாதி ஏழை மாணவர்கள் 145 பேர் கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உயர்ஜாதி ஏழை மாணவர் ஒருவர் ரூ.4.23 கோடி கட்டணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் மட்டுமே உயர்ஜாதி ஏழைகள் ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும்.

நீட் தேர்வில் முறைகேடு நடப்பதற்கு உயர்ஜாதி ஏழை மாணவர்கள் ஒதுக்கீடே சான்றாக மாறி இருப்பதாகவும், முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை ரத்துசெய்வது மட்டுமே
தீர்வாகும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர்ஜாதி ஏழை மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தியது குறித்து விரிவான விசாரணை நடத்த பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : ARISTOCRATIC ,N.Y. R. ,I. Ampalam ,Kota. ,Delhi ,N.Y. ,Indians ,
× RELATED விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல்...