×

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை என சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றுகையில்; பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. brihade hotel ventures நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது; 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

Arenaone நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதன் மூலம் 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Mata Amritanandamayi Mandir Trust நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் Hentage Theme Park அமைகிறது; 12,000 பேருக்கு வேலை கிடைக்கும். பண்பாட்டு ரீதியாக முன்னேறி இருக்க மனித சமுதாயத்தின் பயணங்கள் மிக முக்கியமானவை. உணவு, கல்வி, வணிக தேவைக்காக நாடுகளை பிடிப்பதற்காக என மனிதர்களின் எல்லா பயணங்களுக்கும் ஏதோ ஒரு நோக்கம். தமிழின் அருமை, எங்கள் நாகரிகத்தின் தொன்மை குறித்து உலகில் அனைவருக்கும் தெரியும். மெரினா கடற்கரை தொடங்கி குமரி வள்ளுவர் சிலை வரை தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.

கரகாட்டம், காவடியாட்டம் என ஏராளமான கலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம் என ஏராளமான கலைகள் உள்ளன. ஏறுதழுவுதல் விளையாட்டு சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை உலக அளவில் கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்குதான் உண்டு. கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம், திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம். ரூ.14 கோடி ஒதுக்கி பிச்சாவரம் படகு இல்லத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்காட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். ஏற்காடு உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களையும் மேம்படுத்தி வருகிறோம். 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் ரூ.612.18 கோடி ஒதுக்கியுள்ளோம்.

தமிழ்நாட்டை நோக்கி சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 128 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது. ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட 12 வகையான முன்னுரிமை சுற்றுலாக்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாம்பல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாடு ஆணையம் அமைத்து ரூ.100 கோடியில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. நாட்டிலேயே சிறந்த சுற்றுலா தலமாக தமிழ்நாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உரையாற்றினார்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Shri Narendra Fadnavis ,Tourism Summit ,Tamil Nadu Global Tourism Summit ,Mamallapuram ,World Tourism Summit ,
× RELATED 2026 ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்