×

தை கிருத்திகை விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடைசுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அடுத்த மங்கலம் கிராமத்தில் நடந்த தை கிருத்திகை விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் கையால் வடை சுட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மங்கலம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையொட்டி தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை சுட்டு எடுத்தல், முதுகில் அலகு குத்தில் மரச்செக்கு இழுத்தல், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

பின்னர் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் சுடப்பட்ட வடை சுவாமிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவித்தும், பூந்தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதைதொடர்ந்து வள்ளி திருமணம், வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Thai Krishna festival ,Kalasapakkam ,Thai Krishtiga Festival ,Mangalam village ,Galasapakkam ,Thi ,Kirithigaioti Thar Festival ,Sripalamurugan Temple ,Tiruvannamalai District ,
× RELATED தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த...