×

ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜூன கார்கே விரைவில் தமிழகம் வருகை; திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேட்டி

 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அளித்த பேட்டி: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிலே உச்சப்பட்சமாக எவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்த முடியுமோ அந்த அளவுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் என்பது சிறுபான்மையினர் மீதோ, தேவாலயங்கள் மீதோ நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். தொடர்ந்து மோடி அரசு இதை செய்து வருகிறது. எஸ்ஐஆர் எப்படி பீகாரிலே இறந்தவர்களை எல்லாம் அழைத்து வந்து எங்கள் தலைவர் ராகுல் தேநீர் சாப்பிட வைத்தாரோ?, அதே போன்று மடிப்பாக்கம் பகுதியில் உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

தகுதியான எல்லாருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும். தகுதியற்றவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது. ஆக இந்த அடிப்பையில் தேர்தல் ஆணையம் மிக தெளிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு பல்வேறு குழுக்களை நியமித்து வேலைகளை ஆரம்பித்து இருக்கிறோம். பீகாரில், மகாராஷ்டிராவில் கூட்டணி பேசும் போது எங்களுக்கு எங்கே பிரச்னை வருகிறது என்றால், கடைசி நேரத்தில் தொகுதிகளை ஒதுக்கி, நேரமில்லாததால் வேட்பாளர் தேர்வில் தொய்வு ஏற்படுகிறது. அதை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று தான் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் 2 மாதங்களுக்கு முன்பே இந்த பேச்சுவார்த்தையை எல்லாம் முடித்து விட்டால் தேர்தல் பிரசாரத்திற்கு வருவதும், மாநாட்டிற்கு தலைவர்கள் வருவதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் சரியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

அதனால், நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். பல முறை சொல்லியிருக்கிறோம். இந்தியாவை வழிநடத்த போவது இந்தியா கூட்டணி தான். எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. சில இடங்களில் பிரச்னை உள்ளதை பேசி தீர்த்து கொள்கிறோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. கட்சியை வளர்ப்பதற்கான முயற்சியை எடுத்து கொண்டிருக்கின்றோம். புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rahul ,Priyanka ,Mallikarjuna Karke ,Tamil Nadu ,Dimuka ,Congress ,President ,Selva Bharundaga ,Chennai ,Selwaberundagai ,Sathyamurthi Bhavan ,BJP ,Christmas ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...