×

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னை: ஏழு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு லட்சத்தை தொட்ட தங்கம் விலையால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.95,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த 15ம் தேதி ரூ.99,000ஐ தாண்டியது. அதன்பிறகு அடுத்தடுத்த தேதிகளில் ரூ.1,00,000 ஆகவும், அடுத்த நாள் ரூ.1,00,040 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர். கடந்த 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20ம், பவுனுக்கு ரூ.160ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400க்கும், ஒரு பவுன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்து ரூ.1,00,560க்கு விற்பனையானது.

இதன் மூலம் கடந்த 15ம் தேதிக்கு பின் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Tags : Chennai ,
× RELATED ஒடிசாவில் டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண் : ஆயுதங்கள் ஒப்படைப்பு!