புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி வனத்துறை வசம் இருந்த லட்சுமியின் தந்தங்களை, முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
