சென்னை: காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையிலான போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். உலகில் உள்ள அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு பெருமைக்குரியது. இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக உலகம் பார்க்கலாம், வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர். உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது.