திருப்பூர்: பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம் என்று திருப்பூரில் வைகோ பேசினார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பங்கேற்று பேசியதாவது: பாஜ அரசு சனாதன அரசாக, இந்துத்துவா கொள்கையை திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி, ஒரே நாடு என்பதை திணிக்கிறது. அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், மத வெறியோடு சனாதன அரசு, இந்தி மொழியை எப்படியாவது திணித்து விட வேண்டும் என நினைக்கிறது. நரேந்திர மோடி மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகிறாார்.
பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம்; திருப்பூரில் வைகோ பேச்சு
