டாக்டர், இன்ஜினியருக்கு உதவி செய்த தனுஷ்

விரைவில் அரசியலுக்கு வருவதாக சொல்லப்பட்டாலும், இதுவரை தனுஷ் அதுபற்றி வெளிப்படையாக பேசியது இல்லை. ஆனால், சமீபத்தில் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். கடந்து சென்ற பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்த ரத்த தான முகாமில் பங்கேற்றார். அப்போது 30 மாவட்டங்களை சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு 30 ஆட்டோக்கள் மற்றும் 150 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

அதை தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 2 நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு கல்விக்கான உதவித்தொகையை வழங்கினார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் மகள் ஹரிஷிதா என்பவருக்கு அவரது இன்ஜினியரிங் படிப்புக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டார். அதுபோல், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரசிகர் மன்ற நிர்வாகியின் மகள் ஸ்வேதா என்பவரின் மருத்துவக்கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருவருக்கும் அதற்கான காசோலைகளை வழங்கினார்.

Related Stories: