சூர்ப்பனகையாக மாறிய ரகுல் பிரீத்

மும்பை: பல்வேறு மொழிகளில் நிதேஷ் திவாரி 2 பாகங்களாக இயக்​கி​யுள்ள ‘ரா​மாயணா’ என்ற படத்​தில் ராமராக ரன்​பீர் கபூர், சீதையாக சாய் பல்​லவி, ராவணனாக யஷ், மண்டோதரியாக காஜல் அகர்வால், தசரத சக்ரவர்த்தியாக அருண் கோவில், லட்சுமணனாக ரவி துபே, ஹனுமனாக சன்னி தியோல், கைகேயியாக ஷோபனா நடித்​துள்​ளனர். சூர்ப்​பனகை கேரக்டரில் நடித்​துள்ள ரகுல் பிரீத் சிங் கூறுகையில்​, ‘இது வெறும் திரைப்படம் கிடையாது. பல்வேறு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கிய படம்.

​ரா​மாயணம் போன்ற உலகளாவிய கதை கொண்ட படத்​தில் நானும் ஒரு பகுதியாக இருப்​பதை நினைத்து மிகவும் பெரு​மைப்படுகிறேன். இது திரைப்​படத்​தையும் தாண்​டிய ஒரு பயணமாகும். நமது பாரம்​பரி​யம், கலாசா​ரம் மற்​றும் கதையை உலக அரங்​கிற்கு கொண்டு செல்​லும் அற்புதமான மற்றும் ஒரு அரிய வாய்ப்பு. இப்படத்தின் மூலம் நமது நாட்டை உலக அரங்​கில் முக்கியத்துவப்​படுத்​துகிறோம். அந்த உணர்வை வெறும் வார்த்​தைகளால் விவரிக்க முடியாது. எங்​களு​டன் ரசிகர்களும், பார்வையாளர்களும் இணைந்து, பிரமிக்க வைக்கும் ராமாயண உலகிற்குள் நுழை​யும் அந்த தருணத்​தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories: