திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு கணவருக்கு முதல்முறை உணவு சமைத்த சோபிதா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார். அவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு சோபிதா துலிபாலா என்ற நடிகையை 2வது திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 2024ம் ஆண்டு நடந்தது. தற்போது இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணமான 2 ஆண்டுகளில் கணவர் நாக சைதன்யாவுக்கு முதல்முறையாக இரவு உணவு சமைத்து கொடுத்துள்ளார் சோபிதா துலிபாலா. தனது சோஷியல் மீடியாவில் மனைவி உணவு பரிமாறும் போட்டோவை பகிர்ந்துள்ள நாக சைதன்யா, ‘திருமணமாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு என் மனைவி எனக்கு இரவு உணவு சமைத்துள்ளார். நான் இன்று ஏதோ சரியாக செய்திருக்கிறேன் போல’ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Related Stories: