ஐதராபாத்: முரளி கிஷோர் இயக்கத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்த ‘லெனின்’ படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பாக்யஸ்ரீ போர்ஸ் கண்கலங்கியபடி பேசியதாவது: இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், இயக்குனர் முரளி கிஷோர். அவர் எனக்கு ‘பாரதி’ என்ற கேரக்டரை வழங்கி இருக்காவிட்டால், இன்று எனக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருக்காது. அகில் அக்கினேனி கடினமாக உழைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவரது பயணம் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாவிட்டாலும், முயற்சிகள் பலனளிக்காதபோது ஏற்படும் உணர்வு எப்படி இருக்கும் என்று தெரியும். எனக்கு அருகிலேயே அவர் கடினமாக உழைப்பதையும், ரத்தம் மற்றும் வியர்வை, கண்ணீரை சிந்தி உழைப்பதையும் பார்த்திருக்கிறேன். ஐதராபாத் எனது கர்மபூமி. எனது கடைசி படமும் இங்கேயே அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
