×

இந்திரன்ஸ் கொடுத்த சுவாரஸ்யமான விளக்கம்

மலையாள நடிகர் இந்திரன்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தமிழில் வெளியான ‘கருப்பு’ என்ற படத்தில் நான் ஏற்று நடித்த மட்டாஞ்சேரி சுகுமாரன் என்ற கேரக்டரில் எனது நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. முன்னதாக ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தேன். அதற்கு காரணம், இதன் ஹீரோ விஜய்யை நேரில் பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணம்தான். ஒரு காட்சியில் நானும், அவரும் இணைந்து நடித்தோம். அவர் பலரால் கொண்டாடப்படும் ஒரு நடிகர். அவருடன் நடிப்பது என்பது எனக்கு பெரிய விஷயம்.

இயக்குனர் ஷங்கரும் ஒரு முன்னணி டைரக்டர் என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஆக்‌ஷன் என்று சொல்லி நான் நடிப்பது என்பது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அடூர் கோபாலகிருஷ்ணனின் படப்பிடிப்பு தளம் போல், அங்கு நிறையபேர் பணியாற்றினாலும் கூட, அந்த செட் முழுவதும் அமைதியாக இருக்கும். ஷங்கர் என்னை தேடி வந்து, மிகவும் சகஜமாக பேசி, அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சொல்வார். இவ்விரு காரணங்களுக்காகவே ‘நண்பன்’ படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் அதிக ஆர்வத்துடன் நடித்தேன்’ என்றார்.

Tags : Indrans ,Mattancheri Sukumaran ,Shankar ,Vijay ,
× RELATED மொபைல் வெப் தொடர்கள்… களமிறங்கும் முன்னணி நடிகர்கள்!