ராதிகாவை கண்கலங்க வைத்த பாரதிராஜா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கி திரைக்கு வந்து வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்த படம், ராதிகா நடித்த ‘தாய் கிழவி’. நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்திருந்தார். சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. 75 வயது கிழவி வேடத்தில் ராதிகா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்த நல்ல கருத்தை காமெடி மற்றும் சென்டிமெண்ட் கலந்து சொல்லியிருந்த இப்படத்தை தனது குருநாதர் பாரதிராஜா பார்க்கவில்லையே என்று ராதிகா மிகவும் வருத்தப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள பாரதிராஜாவை நேரில் சந்தித்து பேசிய ராதிகா, அவரது தற்போதைய நிலையை பார்த்து கண்கலங்கினார். இந்நிலையிலும் உற்சாகமாக பேசிய பாரதிராஜா, ‘தாய் கிழவி’ படம் சூப்பராக இருந்தது என்றும்,

ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் பாராட்டினார். அவர்கள் பேசிய வீடியோ வைரலானது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1978ல் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகாவை இயக்குனர் பாரதிராஜா ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: