அமிர்தசரஸ்: பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமிர்தசரஸில் அமைந்திருக்கும் பொற்கோவிலுக்கு நேற்றுமுன்தினம் சென்று வணங்கியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்திருக்கிறார் பிரியங்கா. சுடிதார் அணிந்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டு பொற்கோயிலில் அவர் எச்சில் பாத்திரங்கள் கழுவிய வீடியோ வெளியாகியிருக்கிறது. பெரிய கோடீஸ்வரியாக இருந்தாலும், அமெரிக்காவில் வாழ்ந்தாலும் நம் இந்திய கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பொற்கோவிலில் சேவை செய்திருக்கிறார். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். பிரியங்காவுக்கு அவரின் அப்பா மறைந்த அசோக் சோப்ரா என்றால் உயிர். அதனால் தான் தன் கையில் டாடிஸ் லிட்டில் கேர்ள் என்று டாட்டூ போட்டிருக்கிறார். இந்நிலையில் பொற்கோயிலுக்கு முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘உங்கள் நினைவாக இருக்கிறது அப்பா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
