என்னை வாழ விடுங்கள்: ஆர்த்தி விவகாரத்தில் ரவி மோகன் உருக்கம்

 

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன், தற்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து, இணையதளங்களில் ரவி மோகன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிலர் ரவி மோகனுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிகவும் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இதை மீண்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்ல விரும்பும் அனைத்தையும் மீண்டும் சொல்லுங்கள். ஏனெனில், பெண்கள் மட்டுமே சரியானவர்கள் என்று அனைவரும் நினைக்கிறீர்கள். ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். நமது நீதித்துறை கூட அதை புரிந்துகொள்கிறது. ஒரு நாள் அனைவரும் என்னையும், நான் நேசிக்கும் மக்களுக்காக என்ன செய்தேன் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள். தயவுசெய்து என்னை வாழவிடுங்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.

 

Related Stories: